சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர்., கழக நிறுவனரும், முன்னாள் அதிமுக., அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி : ஆர்எம்வி., பணத்திற்கு பின்னால் என்றும் போனது கிடையாது. அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள் அரசியலில் மத்திய, மாநில அமைச்சர்களாக இருந்துள்ளனர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என வாழ்ந்தவர். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நபர் அவர். அவருடன் எனக்கான நட்பு ஆழமானது, உணர்ச்சிகரமானது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸில் "இராணுவ வீரன், மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா" என 6 படங்களில் ரஜினி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா அஞ்சலி
ஆர்எம் வீரப்பன் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் அஞ்சலி
முன்னதாக மருத்துவமனையில் இருந்த ஆர்எம் வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.