நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் சில பாடல்கள் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் பாடி ஆடிய “ஞாயிறு ஒளிமழையில்...” பாடல் வண்ணத்தில் படமாகி பெரும் வரவேற்பை பெற்றது. வண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக பாடல் காட்சி மைசூர் பிருந்தாவன் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சாவித்ரி, தீபா உன்னி, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார், சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.