இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மிகவும் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் என்கிற படத்தில் இவர்கள் இணைந்து நடித்தாலும் அதன் பிறகு இவர்களை சுற்றி சுழன்றடித்து வரும் கிசுகிசுக்களால் மீண்டும் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனாலும் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களிலும் சினிமா நிகழ்வுகளிலும் பரஸ்பரம் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 5ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பேமிலி ஸ்டார் படம் வெளியாகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா என்கிற ராசியான ஜோடியை உருவாக்கிய இயக்குனர் பரசுராம் தான் இயக்கியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த படம் வெளியாகும் ஏப்ரல் 5ம் தேதி தான் ராஷ்மிகாவின் பிறந்த நாளும் கூட.
அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என்கிற கேள்வி சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “விடுமுறை நாட்கள் துவங்குவதை முன்னிட்டு தான் இந்த தேதியை முடிவு செய்தோம். இது ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.