தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவில் மட்டுமல்ல அதற்கு அதிகமான வரவேற்பை தமிழகத்திலும் பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற குணா குகையை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்ததும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மேலும் காதலுக்காக எழுதப்பட்ட இந்த பாடல் இந்த படத்தில் நட்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்த விதம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவும் படத்தின், தயாரிப்பாளருமான நடிகர் சவுபின் சாஹிர் தற்போது கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது படத்தின் ஒளிப்பதிவாளர் சைஜு காலித்தும் உடன் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மஞ்சு மேல் பாய்ஸ் பட குழுவினர் சந்தித்தபோது சவுபின் சாஹிர் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் அந்த சமயத்தில் அவரால் கமலை சந்திக்க முடியவில்லை என்பதால் சற்று தாமதமாக அவரை சந்தித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சவுபின் சாஹிர், துல்கர் சல்மானின் நண்பனாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளதுடன் அவரை வைத்து பறவ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.