காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து அவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே நடிப்பில் களம் இறங்கி இன்று முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். சிவகுமாரின் மகள் பிருந்தா ஆரம்பத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் பின்னர் தனது விருப்பமான இசை துறையில் ஒரு பாடகியாக அடி எடுத்து வைத்து மிஸ்டர் சந்திரமௌலி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில படங்களில் பாடியுள்ளார். ஆனால் தன்னையும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்து சில காரணங்களால் அதை தான் ஏற்க முடியாமல் போனது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி ஆச்சரியம் அளித்துள்ளார் பிருந்தா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதன் முதலில் என்னை பாடுவதற்காக அழைத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா தான். ஆனால் அந்த சமயத்தில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு என்னை தேடி வந்தது. இது குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தவர் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா தான். எனக்கு அப்போது நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லாததாலும் இசைத்துறையில் தான் பயணிக்க நான் விரும்பியதாலும் அது என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் அதை ஏற்க மறுத்து விட்டேன்.
படம் வெளியான பின்னர்தான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. என் வீட்டில் கூட இதை சொல்லி கிண்டலடிப்பார்கள். ஆனாலும் மாதவனும் சிம்ரனும் அந்த கதாபாத்திரங்களை அவ்வளவு அழகாக செய்திருந்தார்கள். சமீபத்தில் மாதவனை சந்தித்தபோது கூட, உங்களுக்கு ஜோடியாக நான் தான் நடித்திருக்க வேண்டியது.. ஆனால் நீங்கள் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று கலாட்டா செய்தேன்” என கூறியுள்ளார் பிருந்தா.