கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! |

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா, தற்போது இயக்கி வரும் படம் பொன் ஒன்று கண்டேன். அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் வசந்த் ரவி, தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஜியோ ஸ்டுடியோஸ் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா. பொன் ஒன்று கண்டேன் படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு, இப்படம் சம்பந்தப்பட்ட யாரிடத்திலும் அனுமதி பெறாமல் வெளியாகி இருப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்ப போவதாக பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு நன்றி ஜியோ சினிமாஸ்.
ஒரு படம் சம்பந்தப்பட்ட வணிக ரீதியிலான விவகாரங்களில் நடிகர்கள் தலையிட முடியாது. என்றாலும் இது போன்ற அறிவிப்புகளை நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூக வலைதளங்கள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பது சரியல்ல என்று பதிவிட்டு இருக்கிறார்.
வசந்த் ரவி தமிழில் ‛தரமணி, ராக்கி, ஜெயிலர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




