மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்த நிலையிலும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து டிவி நிகழ்ச்சி, விளம்பரம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இவர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
காலில் ஏற்பட்ட ரத்த குழாய் அடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அமிதாப் பச்சன் இன்றே வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். காலுக்கு தான் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டது அவருக்கு இதயத்தில் எந்த பிரச்னை இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.