நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்த நிலையிலும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து டிவி நிகழ்ச்சி, விளம்பரம் என பிஸியாக உள்ளார். இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இவர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
காலில் ஏற்பட்ட ரத்த குழாய் அடைப்பு காரணமாக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அமிதாப் பச்சன் இன்றே வீடு திரும்பி உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். காலுக்கு தான் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டது அவருக்கு இதயத்தில் எந்த பிரச்னை இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் தற்போது பிரமாண்டமாய் உருவாகி வரும் கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக் ஷன் கலந்த பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது.