'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு |

தமிழ்நாட்டை சேர்ந்த தீப்ஷிகா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் 'ரிலீஸ்' படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்குகிறார். மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கிறார். எஸ்.சங்கர் ராம் இசை அமைக்கிறார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் சுந்தரபாண்டி கூறும்போது “சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகிறது. சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.