சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |

தமிழ்நாட்டை சேர்ந்த தீப்ஷிகா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் 'ரிலீஸ்' படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்குகிறார். மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கிறார். எஸ்.சங்கர் ராம் இசை அமைக்கிறார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் சுந்தரபாண்டி கூறும்போது “சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகிறது. சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.




