பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
இயக்குனர் ஷங்கர் இந்தியளவில் பிரமாண்டமான இயக்குனர் என கொண்டாடபடுபவர். கடைசியாக அவரது இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை தந்தது. அதன்பிறகு ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்து கொண்டபோது அவரின் அடுத்த படம் பற்றி கேள்வி எழுந்த போது அவர் கூறியதாவது, "வேள்பாரி நாவலை படத்திற்கான திரைக்கதையாக முழுவதுமாக தயார் செய்து வைத்துள்ளேன். தற்போது முன் தயாரிப்பு கட்டத்தில் உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும். அதிகாரப்பூர்வமான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என கூறினார்.