காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
'ரெட்டைச்சுழி' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்த ஆரி அர்ஜூனா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆரி நடித்து முடித்துள்ள அலேகா, பகவான், டிஎன் 43, மண் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கிறது. சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் விஜய் மில்டன் தெலுங்கு, தமிழில் இயக்கும் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நாயகனாக நடிக்கிறார். 'ரப் நோட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
ஆரி போலீஸ் அதிகாரியாக நடிப்பது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது “ஆரி பார்ப்பதற்கு அமைதியாக தோன்றினாலும், உள்ளுக்குள் நெருப்பு போன்றவர். அந்த அமைதி தீ இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருந்தது. இது வெறும் சாதாரண காவலர் வேடமல்ல , உணர்ச்சிகளால் நிரம்பிய, பன்முகத்தன்மை கொண்ட நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதற்கேற்ப ஆரி சரியான தேர்வாக இருந்தார்” என்றார்.