தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

பிரபல நடிகரான பிர்லா போஸ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சென்னையில் அப்பார்ட்மென்ட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகனை கும்பல் ஒன்று கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போலீஸ் புகாராக மாறியுள்ள நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிர்லா போஸின் காரை அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிர்லா போஸுக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிர்லா போஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார். எனவே, பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து 10 பேருடன் சேர்ந்து அவரது மகனை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி மீண்டும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். பிர்லா போஸ் போலீஸாரிடம் அளித்துள்ள புகாரின் பேரில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.