பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார்.
தற்போது அது தங்க கிரீடம் இல்லை என்றும் செம்பு பூசப்பட்ட கிரீடம் என்றும் சர்ச்சை கிளம்பி உள்ளது. பொதுவாக தங்க கிரீடம், தங்க பதக்கம் என்பதெல்லாம் 100 சதவிகித தங்கத்தில் செய்யப்படுவதில்லை. தங்க முலாம் பூசப்பட்டே தயாரிப்பார்கள். இதனால் அந்த கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டதா? அல்லது தங்க வர்ணம் பூசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வருகிறது.