மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா |
மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் மூத்த மகன் இந்திரஜித் மற்றும் இளைய மகன் பிரித்விராஜ். இருவருமே பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்கிற பெருமையும் பெற்றார். அதை தொடர்ந்து ப்ரோ டாடி, படத்தை இயக்கியவர் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பிரித்திவிராஜின் அண்ணன் இந்திரஜித் சுகுமாரனும் டைரக்ஷனில் இறங்குகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தமிழில் என் மன வானில், சர்வம் மற்றும் இன்னும் வெளியாகாத நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லூசிபர் படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி தான் இந்திரஜித் படத்திற்கும் கதை எழுதி வருகிறாராம். மோகன்லாலை ஹீரோவாக வைத்து பிரித்விராஜ் தனது முதல் படத்தை இயக்கினார் என்றால் இந்திரஜித் தனது தம்பி பிரித்விராஜை கதாநாயகனாக வைத்தே தனது முதல் படத்தை இயக்க இருக்கிறாராம் .