சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |

கடந்த வருடத்திலிருந்து துவங்கி கடந்த வாரம் வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் மம்முட்டியின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதுடன் பொதுவான சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.. குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் மம்முட்டி வித்தியாசமான கதை அம்சம், வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவது 72 வயதிலும் சினிமா மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த 80 வயது கிழவராக தோன்றி ஆச்சரியம் அளித்தார் மம்முட்டி. அதற்கு முன்னதாக வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக தனக்கே உரிய மிடுக்கான தோற்றத்தில் மிரட்டினார். இந்த நிலையில் தற்போது போக்கிரி ராஜா, மதுர ராஜா என ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய புலி முருகன் புகழ் இயக்குனர் வைசாக்கின் இயக்கத்தில் டர்போ என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்த நிலையில் இதன் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மம்முட்டியும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரணைக்காக சுவர் ஓரமாக உட்காரவை வைக்கப்பட்டுள்ளது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புலி முருகன் படத்திற்கு பிறகு மதுர ராஜா, மான்ஸ்டர் என இரண்டு படங்களில் சறுக்கிய இயக்குனர் வைசாக் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என துடிப்புடன் பணியாற்றி வருவதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.




