Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛சினேகம்' அறக்கட்டளை பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி கைது

20 பிப், 2024 - 03:56 IST
எழுத்தின் அளவு:
Fraud-in-the-name-of-Sneham-Trust:-Actress-Jayalaxmi-arrested

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினிமா பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ‛சினேகம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதே பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை துவக்கி பணம் வசூலித்து வருவதாக, நடிகையும் பா.ஜ., நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சினேகன் புகார் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி மனுத் தாக்கல் செய்தார். அதேபோல் சினேகனும், ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிய கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி, இருவர் மீதும் சென்னை திருமங்கலம் போலீசார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, இன்று விசாரணைக்கு வந்திருந்த ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். தன் மீதான குற்றசாட்டுக்கு அனைத்து ஆதாரங்களையும் கொடுத்தும் கைது செய்துள்ளதாக போலீசார் மீது ஜெயலட்சுமி குற்றம் சாட்டினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛தக் லைப்' படத்திற்காக மூன்று படங்களை ஒதுக்கிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!‛தக் லைப்' படத்திற்காக மூன்று ... வில்லன் கதாபாத்திரத்தில் சூரி? வில்லன் கதாபாத்திரத்தில் சூரி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Good Bad Ugly
    • குட் பேட் அக்லி
    • நடிகர் : அஜித் குமார் ,பிரசன்னா
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :ஆதிக் ரவிச்சந்திரன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,பிரசன்னா,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in