பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! |
‛நானும் ரவுடி தான்' படம் உருவான சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதலர் மலர்ந்தது. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர்.
காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன். நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலக் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேப்போல் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.