அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் |
சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சில ரசிகர்கள் அண்மையில் லைவ்வில் வந்த பிரியங்காவிடம் நீங்கள் இப்போது சிங்கிளா? என்று கேள்வி கேட்க, அதற்கு பிரியங்கா ஆமாம் என்று கூறி தனது கணவரை பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் வர்மாவை திருமணம் செய்த பிரியங்கா, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்துள்ளார்.