'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

கேஜிஎப்-2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததை தொடர்ந்து தென்னிந்திய படங்களின் மீது குறிப்பாக கன்னட படங்களின் பக்கம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கவனம் அதிகமாக திரும்பி உள்ளது. கால்ஷீட் கேட்டால் மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டு வருகிறார் சஞ்சய் தத். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‛கே.டி' என்கிற பீரியட் படத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மைசூரில் முகாமிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சய் தத்.
இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்தனை நாட்களில் சஞ்சய் தத்துக்கு ஒரு சிறிய சங்கடம் கூட ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க, ஷில்பா ஷெட்டி, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.