ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
கேஜிஎப்-2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததை தொடர்ந்து தென்னிந்திய படங்களின் மீது குறிப்பாக கன்னட படங்களின் பக்கம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கவனம் அதிகமாக திரும்பி உள்ளது. கால்ஷீட் கேட்டால் மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டு வருகிறார் சஞ்சய் தத். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‛கே.டி' என்கிற பீரியட் படத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மைசூரில் முகாமிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சய் தத்.
இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்தனை நாட்களில் சஞ்சய் தத்துக்கு ஒரு சிறிய சங்கடம் கூட ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க, ஷில்பா ஷெட்டி, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.