வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கன்னட நடிகரும், 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவருமான சிவராஜ்குமார் நேற்று ஐதராபாத்திற்குச் சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சிரஞ்சீவி, “என்னை வாழ்த்துவதற்காக பெங்களூருவிலிருந்து வந்த சிவராஜ்குமார் என் மனதைத் தொட்டுவிட்டார். அவருடன் மதிய உணவு அருந்தி, எங்களது தொடர்புகளை நினைவுபடுத்தி சில மணிநேரம் செலவிட்டோம். அவருடைய அப்பா சாதனையாளர் ராஜ்குமார் அவர்கள் குறித்தும், அவர்களது மொத்த குடும்பம் குறித்தும் பல மறக்க முடியாத பாசமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.