விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது அறிவித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கன்னட நடிகரும், 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவருமான சிவராஜ்குமார் நேற்று ஐதராபாத்திற்குச் சென்று சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அது குறித்து சிரஞ்சீவி, “என்னை வாழ்த்துவதற்காக பெங்களூருவிலிருந்து வந்த சிவராஜ்குமார் என் மனதைத் தொட்டுவிட்டார். அவருடன் மதிய உணவு அருந்தி, எங்களது தொடர்புகளை நினைவுபடுத்தி சில மணிநேரம் செலவிட்டோம். அவருடைய அப்பா சாதனையாளர் ராஜ்குமார் அவர்கள் குறித்தும், அவர்களது மொத்த குடும்பம் குறித்தும் பல மறக்க முடியாத பாசமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.