சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் குதிக்க நினைத்த சிரஞ்சீவி 2008ம் ஆண்டு 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். ஒன்றுபட்ட ஆந்திராவின் அடுத்த முதல்வர் அவர் என்று கணிக்கப்பட்ட நிலையில் 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு தேசிய அரசியலில் கவனம் செலுத்திய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
2012ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஆனார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததும் அரசியலில் இருந்து விலகினார் சிரஞ்சீவி. இனி சினிமாவில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தவர் மளமளவென படங்களில் நடித்தார். ஆனால் ஒரு சில படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாரதிய ஜனதா இரு மாநிலங்களுக்குமான ஒரு நட்சத்திர தலைவரை தேடி கொண்டிருந்தது. தற்போது அது குறிவைத்திருப்பது சிரஞ்சீவிக்கு. ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் காங்கிரஸ் இருவரை எதிர்க்க தகுதியான ஒருவராக சிரஞ்சீவியை பார்க்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பு, பத்மவிபூஷன் விருது என சிரஞ்சீவியும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாகிறார். விரைவில் அவர் உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே சிரஞ்சீவி பாரதி ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொள்வார் என்றும், ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி சிரஞ்சீவி தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.