விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பண்முக திறமைகளை கொண்ட நடிகர். தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது மூன்றாவதாக ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகிறது. இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திடீரென சமூக வலைதளத்தில் தனுஷ் அடுத்து இயக்கி வரும் படத்தில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற உள்ளதாக பரவியது. இதனைத்தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனுஷ் சாரின் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் தேவைப்படுகிறது இதற்கு தொடர்பு கொள்ள என் பெயர், மொபைல் நம்பர் என சமூக வலைதளங்களில் பரவியது உண்மை அல்ல முற்றிலும் பொய். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.