ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் |

சினிமா மற்றும் சின்னத்திரையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரீரித்திகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்ததில் திருமுருகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாதஸ்வரம் சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், ஷானீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீரித்திகா நாதஸ்வரம் சீரியல் நடித்த போது வந்த வதந்திகள் தனக்கு பெரிய தலைவலியாக அமைந்ததாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், 'என்னை பற்றி யாரும் தவறாக பேசிவிடமுடியாது. அந்த அளவிற்கு என் அம்மா என்னை வளர்த்திருக்கிறார். ஆனால், நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது நிறைய வதந்திகள் வந்தது. இயக்குநர் திருமுருகன் என்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பலரும் செய்திகள் பரப்பினர். அந்த நேரத்தில் அந்த வதந்திகள் என்னை மிகவும் பாதித்தது' என்று கூறியுள்ளார்.