10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

சினிமா மற்றும் சின்னத்திரையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரீரித்திகா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்ததில் திருமுருகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாதஸ்வரம் சீரியலில் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், ஷானீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீரித்திகா நாதஸ்வரம் சீரியல் நடித்த போது வந்த வதந்திகள் தனக்கு பெரிய தலைவலியாக அமைந்ததாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், 'என்னை பற்றி யாரும் தவறாக பேசிவிடமுடியாது. அந்த அளவிற்கு என் அம்மா என்னை வளர்த்திருக்கிறார். ஆனால், நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது நிறைய வதந்திகள் வந்தது. இயக்குநர் திருமுருகன் என்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பலரும் செய்திகள் பரப்பினர். அந்த நேரத்தில் அந்த வதந்திகள் என்னை மிகவும் பாதித்தது' என்று கூறியுள்ளார்.




