தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன் நிலவு, கல்யாண வீடு உள்ளிட்டு பல மெகா சீரியல்களை இயக்கி முக்கிய வேடங்களில் நடித்தவர் திருமுருகன். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அவர் இயக்கிய கல்யாண வீடு என்ற சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது திருமுருகன் தன்னுடைய புதிய சீரியல் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய மெட்டி ஒலி சீரியல் ஏப்ரலில் தான் துவங்கினாராம். அதேப்போல் இந்த புதிய சீரியலையும் இந்த ஏப்ரலில் ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலுக்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் திருமுருகன். இவர் பரத் நடிப்பில், எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.