தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
நாதஸ்வரம் சீரியலில் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். அதன்பின் பல தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. பாண்டி கமல் தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன்னை அறிமுகப்படுத்திய திருமுருகன் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
பாண்டி கமல் பேசியபோது, ‛‛நாதஸ்வரம் சீரியல் மூலமாகத்தான் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். என்னுடைய மகள் பிறந்தநாள் விழாவுக்கு திருமுருகன் சாரை அழைக்க சென்றிருந்தேன். ஆனால், அவர் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் பிசியாக இருந்தார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மேனேஜரிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், என் மகள் பிறந்தநாள் விழாவுக்கு அழைக்காமலேயே திருமுருகன் சார் முதல் ஆளாக வந்து தங்க கம்மலை பரிசாக கொடுத்தார்'' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.