'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வேணு அர்விந்த். இவர் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியலும் அவர் நடிக்கும் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படும். ‛அலைகள்' என்ற தொடரில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக சில வருடங்களாக கோமாவில் இருந்தார். தற்போது பூரண நலம் பெற்று திரும்பி வந்துள்ள வேணு அர்விந்த் மீண்டும் ராதிகாவோடு ‛தாயம்மா குடும்பத்தார்' சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், அலைகள் சீரியலில் தான் மிகவும் கொடூரமாக நடித்திருந்ததாகவும் அப்போது பெண்கள் பலரும் என்னை பார்க்கும் போது மண்ணை வாரி தூற்றினார்கள். அதனால் கூட தனக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு பின் சீரியலில் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரங்கள் அதிகமாகிவிட்டதாகவும் அதனால் தனக்கு மிகவும் குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார்.