என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் அடுத்த லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இளையராஜாவின் அண்ணன், தம்பி குடும்பத்தில் பவதாரிணி மற்றும் மறைந்த அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகி பாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே பெண் வாரிசுகள். தனது ஒரே சகோதரியைப் பறி கொடுத்த வாசுகி பாஸ்கர் நேற்று அழுத போது அவரை வெங்கட் பிரபு ஆறுதல் அளித்து அழைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த பலருக்கும் பெரும் சோகமாக இருந்தது.
திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் வாசுகி பாஸ்கர், பவதாரிணி குறித்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய மறுபாதி நீ, அதையும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். மற்றொரு பக்கத்தில் உன்னை பார்க்கிறேன். எனது ஒரே ஒரு சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் மிகவும் மிஸ் செய்வோம். லவ் யு பவதா,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.