இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'அயலான்' படம் தெலுங்கில் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டச் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலையிலாவது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதுவும் நடக்காமல் பட வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.
படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தெலுங்கில் படத்தை வெளியிடும் நிறுவனமும் எதுவுமே சொல்லவில்லை. பொங்கலுக்கு படத்தை தெலுங்கில் வெளியிடாமல் சிலர் தடுத்ததற்கு பொங்கி எழுந்த வினியோக நிறுவனம் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதே சமயம் நேற்று வெளியாகாமல் போனதற்கு எதுவுமே சொல்லாமல் போனது தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அடுத்த வாரம் பல தெலுங்குப் படங்கள் வெளிவர உள்ளதாம். அதற்கடுத்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ்ப் பதிப்பு ஓடிடியில் வெளிவந்துவிடும். எனவே, அடுத்த வாரம் தெலுங்கில் படம் வெளியானாலும் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். நேற்றைய வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த வார விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள் 'அயலான்' குழுவினர்.