விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்தாண்டு இந்த உலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் நேற்று அவரின் பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் தான் அவரது திதியும் வந்தது. இதனால் அவருக்கு ஒரு இசை அஞ்சலி நேற்று செலுத்த உள்ளதாக ஏற்கனவே இளையராஜா அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இதுதான்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இளையராஜா கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். மேலும் இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார்.
இளையராஜா பேசும்போது, “இன்று(நேற்று) தான் பவதாரிணி பிறந்தநாளும் கூட. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பிறந்த நாளும் அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. பெரும்பாலும் இப்படி யாருக்கும் அமைந்ததில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் கடைசியாக இசையமைத்த 'புயலில் ஒரு தோணி' படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை பவதாரிணி இசையமைத்து பாடிய பாடல்களை இங்கே எனது குழுவினர் பவதாரிணியின் நினைவாக இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். பவதாரணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் என்னால் மறக்க முடியாதது” என்று நெகிழ்வுடன் கூறினார்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர், இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர்.