2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? |

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'அயலான்' படத்தை ஆர்.ரவி குமார் இயக்கி உள்ளார். பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை கடும் போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்தார் சிவகார்த்திகேயன். கடைசியாக தயாரிப்பாளரின் 25 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்று படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று படம் வெளியானதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது : வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதன் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கும். அந்த வலி மிகுந்த கதை ஒரு வெற்றிகரமான முடிவைத் தரும். அந்த வலியை ஏற்றுக் கொண்டு வெற்றிக்குத் தயாராகுங்கள். என பதிவிட்டுள்ளார்.