'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த 'அயலான்' படத்தை ஆர்.ரவி குமார் இயக்கி உள்ளார். பல்வேறு பிரச்னைகளால் நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கடைசி நிமிடம் வரை கடும் போராட்டத்திற்கு பிறகு படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்தார் சிவகார்த்திகேயன். கடைசியாக தயாரிப்பாளரின் 25 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்று படத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று படம் வெளியானதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது : வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதன் பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை இருக்கும். அந்த வலி மிகுந்த கதை ஒரு வெற்றிகரமான முடிவைத் தரும். அந்த வலியை ஏற்றுக் கொண்டு வெற்றிக்குத் தயாராகுங்கள். என பதிவிட்டுள்ளார்.