'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

டைம் டிராவலை மையப்படுத்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் வெளியான அந்த படமும் ஓரளவு வரவேற்பை பெறவே செய்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரவிக்குமார்.
கடந்த 2016ல் பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவிக்குமாருக்கு 2018ல் நறுமுகை என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. “எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.. உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று தனது விரலை பிடித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.




