20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
டைம் டிராவலை மையப்படுத்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் வெளியான அந்த படமும் ஓரளவு வரவேற்பை பெறவே செய்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரவிக்குமார்.
கடந்த 2016ல் பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவிக்குமாருக்கு 2018ல் நறுமுகை என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. “எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.. உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று தனது விரலை பிடித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.