துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
டைம் டிராவலை மையப்படுத்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் வெளியான அந்த படமும் ஓரளவு வரவேற்பை பெறவே செய்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரவிக்குமார்.
கடந்த 2016ல் பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவிக்குமாருக்கு 2018ல் நறுமுகை என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. “எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.. உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று தனது விரலை பிடித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.