ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பில்லா-2 வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். ஆனால் அப்படத்திற்கான தலைப்பு என்ன என்பதை இன்றுவரை சஸ்பென்சாக வைத்து வருகிறார்கள். இதற்கிடையே வலை என்று பெயர் வைத்திருப்பதாக பரவியிருக்கும் செய்தியையும் அவர்கள் மறுக்கவில்லை. அதேசமயம் உறுதிப்படுத்தவும் இல்லை. இதனால், டென்சனான சில அஜீத் ரசிகர்கள், இயக்குனர்தரப்பை தொடர்பு கொண்டு, தல படத்துக்கு அப்படி என்னதான் தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்களாம். அப்போதும் வாய் தவறியும் தலைப்பை சொல்லாத விஷ்ணுவர்தன், படத்தின் ஆடியோ வெளியீட்டில் தலைப்பு என்ன என்பது பற்றி அறிவிக்கப்படும். அதுவரைக்கும் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.
அதேபோல் தற்போது அஜீத்தின் புதிய படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவாவோ, வெற்றி கொண்டான் என்பதை சொல்லி விட்டார். ஆனபோதும், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு விட்டநிலையில், கிளாப் போர்ட்டில் புரொடக்சன் நம்பர் -4 என்றுதான் சொல்லி வருகிறார்கள். இப்படி அஜீத் நடித்து வரும் இரண்டு படங்களிலுமே தலைப்பு வெளியிடாமல் இருப்பது, அஜீத்தை விட அவரது ரசிக கோடிகளைத்தான் செம டென்சன்படுத்தியிருக்கிறது.