பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். கடந்த ஆண்டில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'சேர்ஷா' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை கரன் ஜோகர் அவரது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இதில் திரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடிப்பதற்காக படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் 'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா' பாடல் வட இந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால் வியாபாரத்திற்காக சமந்தாவை நடிக்க வைக்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.