சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். கடந்த ஆண்டில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'சேர்ஷா' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை கரன் ஜோகர் அவரது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இதில் திரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடிப்பதற்காக படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் 'புஷ்பா' படத்தில் சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா' பாடல் வட இந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்ததால் வியாபாரத்திற்காக சமந்தாவை நடிக்க வைக்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




