இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் நேற்றுமுன்தினம் மறைந்தார். அரசு மரியாதை உடன் அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதுபற்றி விஜயகாந்த்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவில், ‛‛உங்களின் இதயப்பூர்வமான இரங்கலுக்கு நன்றி. மக்களின் இந்த ஆதரவு, எங்களின் தந்தை எப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார், எவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. இந்த இழப்பிலிருந்து நாங்கள் மீண்டும் வர இந்த கடுமையான நேரத்தில் உங்களின் இந்த ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை அளிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.