சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வைரல் நாயகியாக வலம் வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு கெட்ட பெயர் கிடைத்தாலும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது இவருக்கு நிறையவே ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. ஏற்கனவே, யூ-டியூப் வலை தொடர்களில் நடித்து வந்த தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்க்க, அவருக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
தற்போது வரை எந்த ப்ராஜெக்டிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கமிட்டாகாத தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது ஆக்டிவாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டிருந்த அவர் 'வாழ்க்கையின் முடிவு மரணம்' என கேப்ஷன் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து தனலெட்சுமிக்கு என்னாச்சு? என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக ப்ராட்காஸ்ட் வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி 'ரொம்பா நாளா எதுவும் போடல... அதன் வைரலாகனும்னு சும்மா போட்டு விட்டேன்' என்று கூறியுள்ளார். இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியிடம் செல்லமாக கோபம் காட்டி வருகின்றனர்.