நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வைரல் நாயகியாக வலம் வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு கெட்ட பெயர் கிடைத்தாலும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது இவருக்கு நிறையவே ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. ஏற்கனவே, யூ-டியூப் வலை தொடர்களில் நடித்து வந்த தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்க்க, அவருக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
தற்போது வரை எந்த ப்ராஜெக்டிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கமிட்டாகாத தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது ஆக்டிவாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டிருந்த அவர் 'வாழ்க்கையின் முடிவு மரணம்' என கேப்ஷன் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து தனலெட்சுமிக்கு என்னாச்சு? என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக ப்ராட்காஸ்ட் வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி 'ரொம்பா நாளா எதுவும் போடல... அதன் வைரலாகனும்னு சும்மா போட்டு விட்டேன்' என்று கூறியுள்ளார். இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியிடம் செல்லமாக கோபம் காட்டி வருகின்றனர்.