நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு |

ஆறு மாத குழந்தையாக தமிழ் திரை உலகில் உதித்து, சத்தமே இல்லாமல் 30 ஆண்டுகளாக நடித்து சாதித்துக்கொண்டிருக்கும் நடிகையை தெரியுமா? இவர் சென்னையை சேர்ந்த நடிகை தனலட்சுமி. எழுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள தனலட்சுமி மனம் திறந்ததாவது:
நான் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க துவங்கியவள். அப்போது 'வால்டர் வெற்றிவேல்' படத்தில் சத்தியராஜ்-சுகன்யாவுக்கு மகளாக நடிக்க குழந்தை தேவைபட்டது. என் உறவினர் மூலமாக எனக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தது.
அதன்பின் வால்டர் வெற்றிவேல், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, இன்பா, ஜாம்பவான், சத்திரபதி, பிரியமுடன் உள்ளிட்ட 15க்கும் மேலான படங்களில் பெரிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக 'மங்கை' சீரியலில் அறிமுகமானேன். அப்போது இருந்தே சீரியலில் நடித்து கொண்டிருக்கிறேன்.
என் அப்பா, அம்மா சினிமா துறையில் பயணிக்க எனக்கு ஊக்கமளித்தனர். நடித்து கொண்டே கல்லுாரியில் எம்.எஸ்சி., படித்தேன். 'பூவே பூச்சூடவா' சீரியலில் ஹீரோயினாகவும், 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாகவும், 30 வருடங்களில் 70க்கும் அதிகமான சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பு பயணத்தை தொடர்கிறேன். 2020ல் எனக்கு திருமணம் ஆனது. கணவர் சிவா, தொழிலதிபர். அவர் எனக்கு நண்பராக இருப்பதால் என் நடிப்பு உலகத்திற்கு இன்னும் உற்சாகம் கிடைத்தது. எத்தனையோ இன்னல்களை சந்தித்துள்ளேன். எதற்கும் பின்வாங்காமல் திறமையை முன்வைத்து நல்ல மனிதர்கள் ஒத்துழைப்போடு பயணிக்கிறேன்.
திரைப்படங்களில் வாய்ப்புகள் வருகிறது. திரைப்படங்களை பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்து முடித்து விடுவார்கள் என்பதால் அதில் நடிக்க பெரிதும் எனக்கு விருப்பம் இல்லை. சீரியல்கள் அப்படியல்ல; ஆண்டுக்கணக்கில் நீடித்து கொண்டே இருப்பதால் இது எனக்கு பிடித்திருக்கிறது.
நமக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு யார் சொல்வதையும் காதில் வாங்காமல் நம் வேலையை சரியாக செய்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும். இதை நான் இப்போதும் பின்பற்றுகிறேன். அதனால் மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் நடிப்பை தொடர்கிறேன் என்றார்.