அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
அழகும், திறமையும் இருந்தும் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகரையோ, நடிகையோ ராசி இல்லாதவர் என்பார்கள். அந்த வகையில் அந்தக் காலத்தில் அப்படி ஒரு பெயரை பெற்றவர் எஸ்.பி.எல்.தனலட்சுமி. 1935ம் ஆண்டு நேஷனல் மூவி டோன் என்ற தயாரிப்பு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் முதல் படம் 'பார்வதி கல்யாணம்'. முதல் படம் என்பதால் அதில் நடிக்க தகுதியானவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடினார் தயாரிப்பாளர் மாணிக்கம் செட்டியார்.
அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். நடனம் மட்டுமல்ல பாடுதிலும் திறமையானவராக இருந்தார் தனலட்சுமி. நடித்த முதல் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து பி.கே.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் 'வசந்த சேனா' படத்தில் நடித்தார். அதன் பின்னர் 'சௌபாக்கியவதி' படத்தில் நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த 'காளமேகம்' படத்திலும், 'தேச பக்தி' என்ற படத்திலும் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது ஒரு சில படங்கள் சுமாராக போனது.
7 படங்களில் மட்டுமே நடித்த தனலட்சுமி சினிமாவை விட்டு விலகி இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தினார். தனலட்சுமிதான் தனது அக்கா மகள் டி.ஆர்.ராஜகுமாரியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மாறினார்.