சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
அழகும், திறமையும் இருந்தும் நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வி அடைந்தால் அதில் நடித்த நடிகரையோ, நடிகையோ ராசி இல்லாதவர் என்பார்கள். அந்த வகையில் அந்தக் காலத்தில் அப்படி ஒரு பெயரை பெற்றவர் எஸ்.பி.எல்.தனலட்சுமி. 1935ம் ஆண்டு நேஷனல் மூவி டோன் என்ற தயாரிப்பு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனியின் முதல் படம் 'பார்வதி கல்யாணம்'. முதல் படம் என்பதால் அதில் நடிக்க தகுதியானவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடினார் தயாரிப்பாளர் மாணிக்கம் செட்டியார்.
அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார். நடனம் மட்டுமல்ல பாடுதிலும் திறமையானவராக இருந்தார் தனலட்சுமி. நடித்த முதல் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து பி.கே.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் 'வசந்த சேனா' படத்தில் நடித்தார். அதன் பின்னர் 'சௌபாக்கியவதி' படத்தில் நடித்தார். பின்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த 'காளமேகம்' படத்திலும், 'தேச பக்தி' என்ற படத்திலும் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது ஒரு சில படங்கள் சுமாராக போனது.
7 படங்களில் மட்டுமே நடித்த தனலட்சுமி சினிமாவை விட்டு விலகி இசை கச்சேரிகளில் கவனம் செலுத்தினார். தனலட்சுமிதான் தனது அக்கா மகள் டி.ஆர்.ராஜகுமாரியை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாக மாறினார்.