அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து கடைசி வரை தாக்குப்பிடித்தார். ஆரம்பத்தில் தனலெட்சுமியை பலரும் வெறுத்து ஒதுக்கினாலும், அவர் வெளியேறிய சமயத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதனையடுத்து தனலெட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனலெட்சுமி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில், தனலெட்சுமியின் அம்மா, அவரது பெயரையோ புகைப்படத்தையோ தனலெட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனலெட்சுமிக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தனலெட்சுமி கூறியுள்ளார். இதனால் தனலெட்சுமிக்கும் அம்மாவுக்குமிடையே என்ன பிரச்னை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.