ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து கடைசி வரை தாக்குப்பிடித்தார். ஆரம்பத்தில் தனலெட்சுமியை பலரும் வெறுத்து ஒதுக்கினாலும், அவர் வெளியேறிய சமயத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதனையடுத்து தனலெட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனலெட்சுமி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில், தனலெட்சுமியின் அம்மா, அவரது பெயரையோ புகைப்படத்தையோ தனலெட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனலெட்சுமிக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தனலெட்சுமி கூறியுள்ளார். இதனால் தனலெட்சுமிக்கும் அம்மாவுக்குமிடையே என்ன பிரச்னை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.