'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிபிரியன் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், இனி சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு காரணம், பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததால் ஜெய் பீம் போன்ற சில ஹிட் படங்களின் வாய்ப்புகளை இழந்தது தான். அதன்பின் எவ்வளவு தீவிரமாக தேடியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ரோஷினிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கருடன் படத்தில் ரோஷினி ஹரிபிரியன் நெகட்டிவ் ரோலில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரோஷினியின் சினிமா என்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் ரோஷினி இதுபோல் நல்ல கதைகளை, கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் அட்வைஸ் குவிந்து வருகிறது.