22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றி, தலையில் பெரிய அளவில் முடி வளர்த்து வரும் சிம்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சில தற்காப்பு கலை பயிற்சி பெற்று விட்டு நாடு திரும்பினார். என்றாலும் அப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிம்பு நடிக்கும் 48வது படம் பாகுபலி படத்திற்கு இணையாக ஒரு பிரமாண்டமான சரித்திர கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற தாமதமாகி வருவதாகவும், தொடர்ந்து சிம்பு உடற்பயிற்சி மூலம் தனது பாடி லாங்குவேஜை பராமரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.