நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு உணவகத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, 250 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் இந்த வியாபாரம் காரணமாக படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே 75 சதவீத பட்ஜெட் தொகையை எடுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம். மேலும், இந்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.