மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு உணவகத்தில் அஜித் குமார், அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரும் டின்னர் சாப்பிட்ட புகைப்படம் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, 250 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் இந்த வியாபாரம் காரணமாக படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே 75 சதவீத பட்ஜெட் தொகையை எடுத்து விட்டது தயாரிப்பு நிறுவனம். மேலும், இந்த விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது.