குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? |
நடிகை பார்வதி தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றெல்லாம் பார்க்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தெலுங்கில் நடித்த தூதா மற்றும் ஹிந்தியில் நடித்துள்ள கடக் சிங் என இரண்டு வெப் சீரிஸ்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. அடுத்ததாக துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்கிறார் என்ற செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
ஆனால் இந்த தகவலை பார்த்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பார்வதி. இது குறித்து அவர் கூறும்போது, “எந்த ஒரு சூப்பர் ஹீரோ படத்திலும் நடிப்பதற்கு நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. யாராலோ என்ன காரணத்தினாலோ தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஓகே குட் பை” என்று கூறியுள்ளார்.