புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அதேபோல அதுவரை சில படங்களில் நடித்திருந்த நடிகர் யஷ் இந்த படத்தின் மூலம் பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றுவிட்டார். தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதே சமயம் சில நாட்களுக்கு முன்பாக கேஜிஎப் ஹீரோவான யஷ்ஷும் பிரசாந்த் நீலின் நட்புக்காக இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் இது பற்றி படக்குழுவினர் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ஒரு பெண் குழந்தை நட்சத்திரம் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின்போது தன்னை அறியாமல் இந்த படத்தில் பிரபாஸ், பிரித்திவிராஜ், யஷ் இவர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் தற்போது யஷ் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. விக்ரம் பட ரோலக்ஸ் சூர்யா கதாபாத்திரம் போல இதையும் சஸ்பென்சாக பட ரிலீஸின்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளிப்படுத்த இருந்த நிலையில் தற்போது ஒரு குழந்தை நட்சத்திரம் மூலமாக இந்த விஷயம் வெளிப்பட்டு விட்டது.