சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பல வருட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதர் இயக்கிய இளமை ததும்பிய படம் 'தென்றலே என்னைத் தொடு'. 80களின் பெல்பாட்டம் இளைஞர்களை கவரும் வகையின் தனது பாணியில் இருந்து சற்று விலகி ஜனரஞ்சகமாக இயக்கிய படம். மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மூலம்தான் ஜெயஸ்ரீ அறிமுகமானார். பழம்பெரும் நடிகையும், பாடகியுமான எஸ்.ஜெயலட்சுமி, நடிகர்கள் எஸ்.ராஜம், எஸ்.பாலச்சந்தர் ஆகியோரின் பேத்தி. 1988ல் திருமணம் செய்யும்வரை பிஸியாக நடித்தார். கணவருடன் அமெரிக்காவில் செட்டிலான ஜெயஸ்ரீ 'மணல்கயிறு 2' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். தென்றலே என்னைத் தொடு படத்தில் ஜெயஸ்ரீ பிகினி உடையில் நடித்ததே படத்தின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது.