'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, தம்பி ராமைய்யா, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமின்றி அதற்கு முன்பே தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் மோகன்ராஜ்.
தற்போது தனி ஒருவன்- 2 படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மோகன் ராஜா, இப்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடம் முக்கியத்துவம் பெருகிறதாம்.