நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி தனது பாடி லாங்குவேஜ் பக்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதற்கு சிம்பு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே வல்லவன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, மன்மதன் படத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றி இருந்தார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தற்போது இயக்கி நடித்துவரும் நிலையில் சிம்புவும் அதே பாணியில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.