20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்திற்கு ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்பதை சுருக்கி ‛எல்ஐசி' என்று டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், எஸ். ஜே. சூர்யா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் அக்கா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள நயன்தாரா மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிக்கப் போகிறார்.