ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து லவ் டுடே படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்திற்கு ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்பதை சுருக்கி ‛எல்ஐசி' என்று டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஒருவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், எஸ். ஜே. சூர்யா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நயன்தாராவும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் அக்கா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள நயன்தாரா மூன்றாவது முறையாக இப்படத்தில் நடிக்கப் போகிறார்.