எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.
இந்த மோசடி வழக்கிற்கும் தனக்கும் தொடர்பில்லை, சினிமா தயாரிப்பது தொடர்பாகத்தான் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களோடு வரவு செலவு வைத்துக் கொண்டதாக ஆர்.கே.சுரேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். அதோடு தன் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10ம்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது. ஆர்.கே.சுரேஷ் 12 கோடி மோசடி செய்திருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அவரை கைது செய்யாவிட்டால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12ம்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்.