பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

சென்ட்ரல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் காக்காமுட்டையில் சிறுவனாக நடித்த விக்னேஷ். இதில் வில்லத்தனமான ரோலில் நடித்து இருப்பவர் இயக்குனர் பேரரசு. இந்த பட விழாவில் தலைப்புக்கு ஏற்ப, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் குறித்து பலரும் பேசினார்கள்.
முதலில் பேசிய டிரம்ஸ் சிவமணி, ''எனக்கும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 1975 முதல் சினிமாவுக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது என் வீடு பேசின் பிரிட்ஜ் அருகே இருந்தது. அதனால், கோடம்பாக்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்று அங்கே இருந்து ரிக்ஷாவில் செல்வேன். அந்த காலத்தில் பாடகர் எஸ்பிபி ஆதரவு கொடுத்தார். சில முறை இசைக்கருவிகளை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வைத்துவிட்டு, வீட்டுக்கு போய் டக்கென ரெடியாகிவிட்டு, கச்சேரிக்கு செல்வேன், எத்தனையோ நாடுகளுக்கு சென்றாலும் சென்ட்ரலை மறக்க முடியாது ''என்றார்.
இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில் ''சினிமாவில் சேர வேண்டும், திரைப்பட கல்லுாரி போக வேண்டும் என்ற கனவுடன் 1980ல் சென்னைக்கு வந்தேன். நான் வந்து இறங்கிய முதல் இடம் சென்னை சென்ட்ரல்தான். அப்போது இந்த அளவுக்கு சுத்தமாக இருக்காது. ஆனாலும், அந்த சென்ட்ரலை மறக்க முடியாது'' என்றார். இந்த படம் ஜாதி பாகுபாடுகளை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறதாம்.