'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் எழுந்தன. நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு த்ரிஷாவிடம், திரிஷாவே என்னை மன்னித்து விடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக. ஆமீன் என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் மன்சூர்.
த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வ பண்பு என கூறியிருந்தார். அதையடுத்து அந்த பரபரப்பு ஓய்ந்தது. என்றாலும் த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் கூறினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில், ‛‛மன்னித்துவிடு என்று நான் கூறவில்லை. மரணித்து விடு என்றுதான் கூறினேன். என்னுடைய பிஆர்ஓ தவறாக புரிந்து கொண்டு மன்னித்துவிடு என எழுதிவிட்டார். போனில் சொன்னதால் இந்த தவறு நடந்துள்ளது. அந்த நேரத்தில் மீண்டும் பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன்,'' என்று கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.