தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

சமீபகாலமாக விஜய் - அஜித் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்குமாறு சில சினிமா பிரபலங்களும் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். இப்படியான நிலையில், இயக்குனர் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சோசியல் மீடியாவில் பலரும் விஷத்தைதான் கக்குகிறார்கள். இது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிடுவது போல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் - அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு விஜய் தான் பிடிக்கும், எனக்கு அஜித்தான் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது கொஞ்சம் கூட சரி இல்லை,'' என்று அந்த பேட்டியில் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்




