'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
சமீபகாலமாக விஜய் - அஜித் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்வது அதிகரித்து வருகிறது. சினிமா ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் விஜய் - அஜித் குறித்த விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்குமாறு சில சினிமா பிரபலங்களும் கேட்டுக் கொண்டும் வருகிறார்கள். இப்படியான நிலையில், இயக்குனர் மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சோசியல் மீடியாவில் பலரும் விஷத்தைதான் கக்குகிறார்கள். இது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் கடுமையாக சண்டையிடுவது போல் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால் அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால் விஜய் - அஜித் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு விஜய் தான் பிடிக்கும், எனக்கு அஜித்தான் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டு சண்டை போட்டுக்கொள்வது கொஞ்சம் கூட சரி இல்லை,'' என்று அந்த பேட்டியில் மணிரத்னம் தெரிவித்து இருக்கிறார்